இந்தியாவில் (India) பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இந்தியாவில் உத்தரகாண்ட்டில் (Uttarakhand) இன்று (04) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், உத்தரகாண்ட் மாநிலம் பவுரி என்ற இடத்தில் பேருந்து ஒன்று 60 பேருடன் ராம்நகர் நோக்கி பயணித்துள்ளது.
இந்தநிலையில், மார்ச்சூலா (Marchula) பகுதியை கடந்த போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது.
இதனால் 200 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.