நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே நடப்பு அரசாங்கம் புத்ராஜெயாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம் என்று Bersatu கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று கோடி காட்டினார்.
தமது தலைமையிலான பெரிக்காத்தான நேஷனல், மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கியினால் பீதி அடைந்துள்ள நடப்பு அரசாங்கம், தங்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளுமானால் அதன் பின் விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் எச்சரித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் விரைவில் கவிழலாம் என்று கடந்த மார்ச் முதல் தேதி பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கோடிகாட்டியிருந்த வேளையில் அவரின் அந்த சமிக்ஞையை உறுதிப்படுத்தும் வகையில் முகைதீன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இன்று கோலாலம்பூரில் Menara PGRM மில் பெர்சத்து கட்சியின் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் முகைதீன் இதனை தெரிவித்தார்.