நாட்டில் அரிசி தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு சில்லரை வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நாட்டின் முன்னனி சங்கிலி தொடர்பு வர்த்தக பேரங்காடி மையமான மைடின் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் அமீர் அலி மைடின் கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில் உள்ளூர் அரிசியின் விலை உச்சவரம்பு விலையை உயர்த்துவது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.