ஆபாசப் படம் பார்த்த மகன் மீது வெண்ணீர் ஊற்றிய தாய் !

தனது 13 வயது மகன் கைப்பேசியில் ஆபாச வீடியோக்களை பார்த்ததால் ஆத்திரமடைந்த தாய் தன் மகன் மீது வெண்ணீரை ஊற்றினார். இந்தக் குற்றத்தை அவர் மலாக்கா செஷன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிபதி Mohd Sabri Ismail விதித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி, சுங்கை ஊடாங்கில் உள்ள அரசாங்க ஊழியர்கள் குடியிருப்புப் பகுதியில் அதிகாலை 2.56 மணிக்கு இக்குற்றத்தை அந்த 38 வயது பெண்மணி புரிந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்மணி மனநல சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும், தன் மகன் மீது வெண்ணீர் ஊற்றிய சம்பவத்தில் இருந்து அவர் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்திற்கு இலக்காகி இருப்பதால் அவருத்துவர் கூடுதல் அளவிலான மருத்துகளைக் கொடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்