இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமியை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நியமித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பினால் காலமான டத்தோ ரமேஷ் ராவிற்கு பதிலாக அர்விந்த் அப்பளசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நனிசிறந்த தலைவர் விருதை வென்றவரான அர்விந்த், பதவி நியமனம் மார்ச் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. துணைபிரதமமர் அகமட் ஜாஹிட்டின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி செயல்படுவார். 29 வயதான அர்விந்த் , பேரா பகான் டத்தோவை சேர்ந்தவர் ஆவார்.