இரு உறவினர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

பேராக், மார்ச் 8 –

கடந்த மாதம் பேரா, மன்ஜோங் மாவட்ட நகராண்மைக்கழக ஊழியரை கொலை செய்ததாக இரண்டு உறவுக்கார ஆடவர்கள், மன்ஜோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

43 வயது ம். சரவணன் மற்றும் 48 வயது ம். தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் மாஜிஸ்திரேட் T. கவிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சரவணனும், தமிழ்ச்செல்வனும் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி இரவு 9 மணியளவில் மன்ஜோங் ஆயேர் தாவார் அருகில் Taman Biru என்ற இடத்தில் ஒரு வீட்டில் மஞ்சோங் நகராண்மைக்கழக ஊழியரான 45 வயது ம். சேகரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை, ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அவ்விரு இந்திய இளைஞர்களிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்