நாட்டின் ஒன்பதாவது பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் மற்றும் Janawibawa திட்டத்தில் முறைகேட்டிற்கான ஆதாரங்கள் இருக்குமானால் அவை குறித்து விசாரணை செய்வதும், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதும் மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மை பொறுத்தது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
SPRM விவகாரத்தில் தாம் தலையிட முடியாது என்றும் இது அந்த ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் பிரதமர் விளக்கினார். vமுன்னாள் பிரதமர்களாக முகைதீன் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக ஆதாராங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுப்பது SPRM மை பொறுத்தது என்று அன்வார் தெரிவித்தார்.