உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மின் புகார் மையம்

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மக்களுக்கான e-புகார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. உலு சிலாங்கூர் தொகுதியில் குறிப்பாக, பத்தாங் காலி, கோலகுபு பாரு, உலு பெர்ணம் ஆகிய பகுதிகளில், மக்கள் நலன் சார்ந்த புகார்கள், ஆலோசனைகள், பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஏதுவாக மூடா கட்சியின் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் தலைவர் டாக்டர் ஆர். சிவபிரகாஷ் இச்சேவை​ மையத்தைத் தொடக்கி​யுள்ளார்.


உலு சிலாங்கூர் தொகுதி மக்கள், தங்கள் புகாரை தெரிவிக்க அல்லது பரிந்துரைகளை முன்வைக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு தங்கள் கைப்பேசியில் e-புகார் சேவை மையத்தின் QR குறியீட்டை உள்ளீடு செய்யுமாறு டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக்கொள்கிறார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்