கெடா, உலு மூடாவில் உள்ள பாதுகாகப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டும் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்பட வில்லை என இயற்கை வளம், சுற்றுச் சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமாட் தெரிவித்தார்.
தமது அமைச்சுக்கு புகார் கிடைத்த நிலையில், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அங்கு எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையும் நடக்கவில்லை என உறுதி செய்யப்பட்டது எனவும் அமைச்சர் நிக் நஸ்மி குறிப்பிட்டார்.