பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எதனையும் தாம் இதுவரையில் பெறவில்லை என்று மக்களவை சபா நாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்துள்ளார்.அப்படியொரு தீர்மானத்தை எதிர்க்கட்சி கொண்டு இருக்குமானால் நாடாளுமன்றக்கூட்டம், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் அதனை தம்மிடம் சமர்ப்பிக்கலாம் என்று Johari Abdul குறிப்பிட்டார்.எனினும் அந்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு விடுவதா ? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வது சபா நாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று Johari Abdul விளக்கினார்.