கூகல் நிறுவனத்துடன் பிரதமர் சந்திப்பு

Alphabet மற்றும் கூகல் நிறுவனத்தின் தலைவரும் முதலீட்டு தலைமை செயல்முறை அதிகாரியுமான ரூத் போரட்- டுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இயங்கலை வாயிலாக சந்திப்பு நடத்தினார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் தங்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த இயங்கலை சந்திப்பு இன்று நடைபெற்றதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அவ்வார் குறிப்பிட்டார்.

மலேசியாவில் விரிவாக்கம் செய்யக்கூடிய துறைகளில் ஏற்படுத்தப்படக்கூடிய மேம்பாடுகளுக்கான வரைவு நடவடிக்கைகள் குறித்து ரூத் போரட்- தம்முடன் விவாதித்தாக பிரதமர் தெரிவித்தார்.

தவிர கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் தொடர்பாக தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கக்கூடிய விவகாரங்கள் குறித்தும் தாங்கள் விவாதித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்