கூட்டுறவு கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கையாளுவதற்கு B40 தரப்பினருக்கு உதவுவதில், கூட்டுறவுக் கழகங்கள் நீண்ட காலமாகவே முக்கியப் பங்காற்றி வருகின்றன என்று Tapah நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri எம். சரவணன் தெரிவித்தார். ஆதாயத்தைப் பிரதான நோக்கமாக கொண்டிருக்காமல், மக்கள் நன்மை அடையவும், அவர்களின் நல்வாழ்வு பெருகவும், சமூகவியல் தொழில் முனைவேருக்கான ஒரு முதலீடாக கூட்டுறவுக் கழகங்கள் விழங்கிவருகின்றன என்று Datuk Seri Saravanan புகழாரம் சூட்டினார்.

Koperasi Penternak Jaya என்ற கூட்டுறவுக் கழகத்தின் மூன்றாவது ஆண்டுக் கூட்டத்தை கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தி உரையாற்றுகையில் அக்கூட்டுறவுக் கழகத்தின் தலைவருமான Datuk Seri Saravanan மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்