பிரதமர் டத்தோஸ்ரீ அன்பார் இப்ராஹிமின் மூத்த புதல்வியும், முன்னாள் Permatang Pauh எம்.பி.யுமான Nurul Izzah, அரசாங்க ஏஜென்சிகளுக்கு இடையே பொருளாதார ஊக்குவிப்பு அமலாக்க, ஒருங்கிணைப்பு பிரிவான LAKSANA- வில் சம்பளம் பெறும் ஓர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நிதி அமைச்சு மறுத்துள்ளது.
ஊடகங்கள் கூறியுள்ள அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் நிதி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது. .
அரசாங்க ஏஜென்சிகளின் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அமைப்புதான் LAKSANA- வாகும்.
அதில் சம்பளம் பெறாத ஓர் ஆலோசகராகவே Nurul Izzah இருப்பதாக நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே தமக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டுள்ள அவதூறு தன்மையிலான இந்த குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ் புகார் செய்யப் போவதாக Nurul Izzah தெரிவித்துள்ளார்.