கேபிள் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் கைது

அம்பாங் ஜெயா, ஜுன் 30 –

சிலாங்கூர், உலு கெலாங் , ஜாலான் ஹில்வியூ என்ற இடத்தில் கேபிள் திருடும் நடவடிக்கையில் தீவிர ஈடுபாடு செலுத்தி வந்ததாக சந்தேகிக்கும் எட்டு உள்ளூர் ஆண்கள் உட்பட மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 5.23 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் சந்தேகத்திற்கிடமான காரில் இருவர் சென்றதை கண்டறிந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் முகமட் அசம் இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காரை நிறுத்துவதற்கு போலீஸ் அதிகாரிகள் கட்டளையிட்டதை தொடர்ந்து, அக்காரின் ஓட்டுநர் சட்டென்று சுங்கை பெசி -உலு கெலாங் நெடுஞ்சாலையின் உள்ளே நுழைந்ததாகவும் மற்றொருவர் காரிலிருந்து கீழே குதிக்க முற்பட்ட வேளை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக முகமட் அசம் கூறினார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக 17 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய 9 பேரும் கைது செய்யப்பட்டதாக முகமட் அசம் அறிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்களில் இருவர் நாளை வரை தடுப்பு காவலிலும் மேலும் ஒன்பது பேர் வரும் ஜுலை 3 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்