கொலை செய்யப்பட்ட நிலையில் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

காப்பார், ஏப்ரல் 26-

சிலாங்கூர், காப்பார், தாமான் ஜெயா- வில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கும் ஆடவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 11.39 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தடைந்த போது 38 வயது உள்ளூர் ஆடவர் சுயநினைவற்ற நிலையில் படுக்கறைக்கு முன் இறந்து கிடப்பதை கண்டறியப்பட்டதாக விஜய ராவ் கூறினார்.

சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனையிட்ட போது நான்கு பேர் கத்திகள் மற்றும் டேசர் துப்பாக்கியுடன் அவ்வீட்டினுள் நுழைந்திருப்பது காணப்பட்டதாக அவர் விளக்கினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் காரணத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக விஜய ராவ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்