கோலாலம்பூரில் உள்ள உணவங்களில் தூய்மைக்கேட்டு நிலவி வருவதாக கிடைக்கப்பெற்ற புகார் தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அசுத்தத்தின் இருப்பிடமாக விளங்கிய மூன்று உணவகங்கள் உடனடியாக மூடப்படுவதற்கு உத்தரவிடப்பட்டதுடன், தூய்மையை பேணாமல் இருந்து வந்த உணவகங்களுக்கு 58 சம்மன்களை வெளியிட்டுள்ளது.
Operasi Sepadu Bersih என்ற பெயரில் 58 உணவு வளாகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டன.
செத்தியா வங்சா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Genting Klang, தீத்தி வங்சா நாடளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Maktab, பத்து நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Taman Mastiara, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Taman Bukit Anggeril, கெப்போங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட Jalan Rimbunan Raya ஆகிய பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.