கோல குபு பாரு இடைத்தேர்தலில் மலாய் வேட்பாளரை டிஏபி களமிறக்கும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-

வருகின்ற மே மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர்,கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், டிஏபி கட்சி மலாய் வேட்பாளரை களமிறக்குவதற்கான சாத்தியம் உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில், ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் சரிபா பாக்கர் முன்னணியில் உள்ளதாக, டிஏபி-யைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

மலாய் வாக்காளர் விகிதம் 50 விழுக்காடாக உள்ளதால், வரும் தேர்தலில் மலாய் வேட்பாளர் முன்னிறுத்தப்படலாம். இதர வேட்பாளர்களைவிட சரிபா அங்குள்ள மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக திகழ்வதாக கூறிய அவர், டிஏபி-யின் முடிவுக்கும் அறிவிப்புக்கும் காத்திருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனிடையே, கோல குபு பாரு இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு, மலாய் கட்சியிலிருந்து ஒருவர் உட்பட மொத்தம் ஐவரின் பெயரை பேரிக்காதான் நசியனால் பட்டியலிட்டுள்ளதாக, கெராக்கான் கட்சியை சேர்ந்த ஒருவர் நேற்று கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்