சர்சைக்குரிய நபர்கள் சபாவில் நுழைவதற்கு தடை வேண்டும்

கோத்தா கினபாலு, ஏப்ரல் 06-

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து, பிளவுகளையும் பேதங்களையும் விதைக்கும் நபர்கள், சபாவிற்குள் நுழைவதற்கு தடை விதிப்பது மீதான பரிந்துரைக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் டான் ஸ்ரீ அனிபாஹ் அமான் தனது ஆதரவை நல்கியுள்ளார்.

அதேவேளையில் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர்கள் மீதான விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் போக்கு, ஒரு போதும் கடைப்பிடிக்கப்படக்கூடாது என்பதையும் சபா அம்னோ தொடர்புக்குழுவின் முன்னாள் தலைவரான அனிபாஹ் அமான் குறிப்பிட்டார்.

தற்போது சர்ச்சைக்குரிய நபராகவும், இனங்களுக்கு இடையில் பதற்ற நிலையை உருவாக்கி வருபவருமான அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ் சபாவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை தொடர்பில் கருத்து கேட்ட போது, அனிபாஹ் அமான் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்