ஜோகூர், ஜுன் 30-
ஜோகூர், ஜாலான் குளுவாங் – மெர்சிங் – கில் சுற்றுலா பேருந்து ஒன்று தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் உட்பட சுற்றுலா வழிகாட்டி பலத்த காயத்திற்கு ஆளாகினர்.
சம்பந்தப்பட்ட பேருந்தை அதன் ஓட்டுநர், அப்பகுதியில் தரையிறக்கும் போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்த்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் பஹ்ரின் முகமத் நோ தெரிவித்தார்.
அதில், ஓட்டுநர் உட்பட சுற்றுலா வழிகாட்டி மட்டுமே இருந்ததாக பஹ்ரின் முகமத் கூறினார்.
மேலும், உயிர் சேதமின்றி அவ்விருவரும் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக பஹ்ரின் முகமத் தகவல் அளித்தார்.