ஜனவரி 7 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்

கோலாலம்பூர், ஜன – 4,

பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வரும் ஜனவரி 7 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா அறிவித்துள்ளது.

காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியம் இருப்பதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி மெட் மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்