பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமிக்கு எதிராக சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாக்கீர் நாயக், மேலும் மூன்று அவதூறு வழக்குகளை தொடுத்துள்ளார்.
இந்த மூன்று வழக்குகளையும் ஸாக்கீர் நாயக், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன்பு தனக்கு எதிராக ஸாக்கீர் நாயக், தொடுத்துள்ள அவதூறு வழக்கில் டாக்டர் இராமசாமி தோல்விக் கண்டதைத்தொடர்ந்து அவர், அந்த சமயப் போதகருக்கு 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது-
பொது மக்கள் வழங்கிய நன்கொடை மூலம் 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை ஸாக்கீர் நாயக்கிடம் டாக்டர் இராமசாமி செலுத்திய வேளையில் அந்த சமயப் போதகர் ராமசாமிக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளார்.