தீ விபத்தில் 8 கார்கள் அழிந்தன

கோலாலம்பூர், ஜன – 7,

இன்று, தாமான் செகாம்பூட்டில் உள்ள கார் சேவை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 8 கார்கள் சேதமாகின.

காலை 8.08 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க செந்துல், ஜிஞ்சாங், ஹங் துவா ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகளுடன் 27 வீரர்கள் களத்தில் இறங்கினர் என முகமட் ஹஃபிஸான் தெரிவித்தார்.

2 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட அந்த கட்டடத்தில் ஏற்பட்டத் தீயில், உபரி பாகங்கள் வைக்கப்பட்ட அறையும் கோப்புகளும் ஆவணங்களும் வைக்கப்பட்ட அறையும் தீக்கிரையாகின.

மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 கார்களும் தீயில் சேதமாகின. சேதத்தின் மதிப்பும் தீ விபத்துக்கான காரணமும் இன்னும் கண்டறியப்பட வில்லை.  

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்