தூக்கிலிருந்து முன்னாள் டாக்சியோட்டி தப்பினார்

1029.2 கிராம் கனபீஸ் போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு முன்னாள் டாக்சியோட்டியான எம். பாஸ்கரன் என்பவர் தூக்குத் தண்டனையிலிருந்து இன்று தப்பினார்.

பாஸ்கரனுக்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 52 வயதான அந்த முன்னாள் டாக்சியோட்டிக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை 7 மணியளவில் சிலாங்கூர், கோலக்கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் தொழிற்பேட்டைப் பகுதியில் தைபான்கோ கார் நிறுத்தும் இடத்தில் போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் பாஸ்கரனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்