நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு பதிவு!

இந்தியா, ஏப்ரல் 01 –

தமிழ் திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சரண்யா பொன்வண்ணன். இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணனின் மனைவியான இவர், கமல் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோயின் ரோலில் நடித்துக்கொண்டிருந்த இவர், பின்னர் அண்ணி ரோலில் நடிக்க ஆரம்பித்தார். ராம் படத்தில் நடிகர் ஜீவாவிற்கு அன்னையாக நடித்து தாய்மார்கள் மனங்களில் இடம் பிடித்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து தென்னிந்தியா அளவில் பிரபலமான நாயகியாக இருக்கிறார். இவரது வயது, 53. 

ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக பக்கத்து வீட்டு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விஷயம் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் முழுமையாக என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம். 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்