நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கோலாலம்பூர் மாநகரில் விபச்சார நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்களின் கவன ஈர்ப்புக்குரிய பகுதிகளாக நான்கு இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்று மாநகர் போலீஸ் தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு இடங்களும் போலீசாரின் மேற்பார்வையில் உள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Jalan Pataling, Jalan Gelang, Jalan Pudu மற்றும் Hotel Richmoore ஆகியவை அந்த நான்கு இடங்களாகும். விபச்சார நடவடிக்கையற்ற ஒரு பகுதியாக கோலாலம்பூர் மாநகர் விளங்குவது போலீசாரின் இலக்காகும். முதல் கட்ட நடவடிக்கையாக சாலையோரங்களில் நடைபெறும் இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கை துடைத்தொழிப்பட வேண்டியுள்ளது என்று Datuk Rusdi குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்