நீரில் அடித்து செல்லப்பட்ட இருவர் மீட்டெடுக்கப்பட்டன

தாப்பா,பிப்.8
பிடோர், கம்போங் போ அருகிலுள்ள சுங்ஙாய் கெஞ்ஞோர்ரில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் காணாமல் போன இரு பெண் குழந்தைகளின் உடல் மீட்டெடுக்கப்பட்டன.

7 வயதுடைய ஹான்னா மிகாய்லா அசாம் மற்றும் இரண்டு வயதுடைய ஹனும் மரிசா அசாம் ஆகியோரின் உடல் இன்று காலை 9 மணியளவில் தீயணைப்பு மீட்புப்படையினரால் கண்டெடுக்கப்பட்டதாக பேராவிலுள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை தலைவர் சயானி சைடோன் கூறினார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அவ்விருவர்களின் உடலும் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை 4:30 மணியளவில் ஆற்றில் குளிக்க சென்ற நால்வரில் 37 வயதுடைய அசுரா பானி யின் உடல் கண்டெடுக்கப்பட்ட வேளையில் மேலும் மூவர் நீரினால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்