ஜோகூர்பாரு, ஸ்குடாய் அருகே தாமான் முத்தியாரா ரினி, ஜாலான் பெர்ஸியாரான் முத்தியாரா மாஸ் என்ற இடத்தில் வாகனப்பட்டறை ஒற்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அதன் உரிமையாளர் உயிரிழந்தார். பலத்த காயங்களுக்கு ஆளான 41 வயதுடைய அந்த நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார். அவருடன் பணியில் இருந்த மேலும் ஒருவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளானார்.
இச்சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழும் போது அதன் உரிமையாளரும், உதவியாளரும் மட்டுமே பட்டறைக்குள் இருந்ததாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.
கால் முறிவு ஏற்பட்டு, உடலில் பலத்த காயத்திற்கு ஆளாகியுள்ள 27 வயதுடைய உதவியாளர் சுல்தான் அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஹ்மாட் அரிஃபின் மேலும் விவரித்தார்.