பணத்தைத் திருடியவர் எவ்வாறு கட்சி கணக்கில் சேமிப்பாக வைத்திருக்க முடியும்?

ஒருவர் பணத்தை உண்மையிலே திருடி இருப்பரேயானால் அந்தப் பணத்தை அவர் எவ்வாறு தான் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் வைத்திருக்க முடியும் என்று Bersatu கட்சியின் துணை தலைவர் Ahmad Faizal Azumu கேள்வி எழுப்பி உள்ளார்.


அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் இருக்கிறது என்றால் அது திருடப்பட்ட பணமாக இருக்காது என்பதே இதன் பொருளாகும் என்று Ahmad Faizal குறிப்பிட்டார்.


Bersatu கட்சியின் வங்கிக் கணக்கில் அரசியல் நன்கொடைகள் வரவு வைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்திய Ahmad Faizal, கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பது குறித்து மேற்கண்ட வாறு கருத்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்