பணம் இல்லாததால் தாயை பிணையாக பிடித்துள்ளார்

பினாங்கு, ஜார்ஜ் டவுன், ஜாலான் கங்சாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனது தாயாரை பிணைப்பிடித்து, வீட்டை தகர்த்தப் போவதாக மிரட்டிய 40 வயது மதிக்கத்தக்க நபர், போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கிடைக்காததைத் தொடர்ந்து தனது தாயாரை அச்சுறுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பினாங்க மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முஹம்மாட் யூசுப் ஜான் முஹம்மாட் தெரிவித்துள்ளார்.

70 வயதுடைய தமது தாயாரிடமிருந்து பணம் பறிப்பதற்காக அவரை அடித்து சித்ரவதை செய்துதுடன் வீட்டின் எரிவாயு கலனை திறந்து, வெடிக்கச் செய்யப் போவதாக அந்த நபர் மிரட்டியுள்ளார் என்று முஹம்மாட் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.57 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அடுக்குமாடி வீட்டிற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு, மீட்புப்படையினர், அந்த நபருடன் சுமார் மூன்று மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த மூதாட்டியை பாதுகாப்பாக மீட்டனர்.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரையும் போலீசார் வளைத்துப் பிடித்தனர் என்று டத்தோ முஹம்மாட் யூசுப் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்