பத்துமலைத் திருத்தலத்தில் மண்டலாபிஷேகம்

பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

மகா கும்பாபிஷேகத்தையொட்டி 48 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. மண்டலாபிஷேகத்தின் பூர்த்தி விழா மற்றும் மகா சண்டி ஹோமம் வரும் ஜனவரி 6 ஆம் தேதி சனிக்கிழமையும், ஜனவரி 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இவ்விரு நாட்களும் நடைபெறும் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவிலும், மகா சண்டி ஹோமத்திலும் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு துர்க்கை அம்மனின் திருவருளைப் பெற்று உய்யுமாறு கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்