பால் யோங் வழக்கில் மார்ச் முதல் தேதி தீர்ப்பு

தனது வீட்டில் பணிபுரிந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பேரா, Tronoh முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Paul Yong Choo Kiong- அத்தண்டனையை எதிர்த்து செய்து கொண்ட மேல்முறையீட்டில் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் வரும் மார்ச் முதல் தேதி தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

தமக்கு எதிரான தண்டனையை ரத்து செய்வதற்கு தனது மேல்முறையீட்டில் Paul Yong மூன்று கூடுதல் காரணங்களை முன்வைத்து, சமர்ப்பித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரின் மேல்முறையீட்டை விசாரணை செய்தது.

ஜசெக.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான 53 வயதான Paul Yong, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் தேதி இரவு ஈப்போவில் உள்ள தனது வீட்டில் 23 வயது இந்தோனேசியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கடந்த ஆண்டு ஜுலை 27 ஆம் தேதி ஈப்போ உயர் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டு சிறை , இரண்டு பிரம்படி தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்