மக்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்வோம்

கூலிம், டிசம்பர் 12 – கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ருக்குன் தெதங்கா ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டு தீபாவளி நிகழ்வு நடைபெற்றது.

ருக்குன் தெதங்கா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாமான் பேரா, தாமான் இமாஸில் உள்ள குடியிருப்புவாசிகள் திரளாக ஒன்றுகூடினர். இந்நிகழ்வை மேலும் மெருகூட்ட சிறப்பு வருகையாளர்களாக கூலிம் பண்டார் பாருவின் ஒருமைப்பாட்டு அலுவலகத்தின் துணை அதிகாரி சுல்கிப்லி, முகமான் ஐமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாமான் பேரா, தாமான் இமாஸ் போன்ற குடியிருப்புப்பகுதிகளின் சாலைகள்,  சீரமைக்கப்படாமல் இருந்து வருவதை ருக்குன் தெதங்கா தலைவரான யாதவன் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அப்பகுதியில் இருக்கும் வாய்கால்களிலும் பிரச்னை இருந்து வருவதாகவும் இதுக்குறித்து பலமுறை கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்திடம் புகார் அளித்திருந்தும் இதுநாள்வரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமான தகவலே என்றார் யாதவன்.

இதுக்குறித்து மீண்டும் மனு ஒன்று அனுப்பவிருப்பதாகவும் குடியிருப்பு மக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முற்படுவதாகவும் யாதவன் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்