மண்வாரி இயந்திரத்தின் டயர் வெடித்து, தொழிலாளர் உயிரிழந்தார்

சுங்காய் பூலோ, மே 03-

சிலாங்கூர், சுங்காய் பூலோவில் TYRE பழுதுபார்க்கும் மையம் ஒன்றில், மண்வாரி இயந்திரத்தின் டயரில் தொழிலாளர் ஒருவர் காற்றை நிரப்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அது திடிரென வெடித்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அச்சம்பவத்தைக் குறித்து புகைப்படத்துடன் கூடிய ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் நிலையில், சுங்காய் பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டன் முகமது ஹபீஸ் முஹம்மது நோர் அதனை உறுதிபடுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12.40 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 19 வயது தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, தலையில் கடும் காயத்திற்கு இலக்காகியிருந்த 20 வயதுடைய மற்றொரு தொழிலாளி, சுங்காய் பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதுவொரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டதாக கூறிய ஹபீஸ் முஹம்மது, அது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்