போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில் தனது மனைவின் கழுத்தை நெரித்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்திய ஆடவர் ஒருவருக்கு மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 17 மாத சிறைத் தண்டனை விதித்தது.
44 வயது சின் சோங் தோய் என்ற அந்த நபர் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மூவார், ஜாலான் பக்ரி, Taman Arosa-வில் உள்ள தனது வீட்டில் 42 வயதுடைய தனது மனைவியின் கழுத்தை நெரித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் Fatin Dalilah Khalid இத்தண்டனையை விதித்தார்.