மனைவியின் கழுத்தை நெரித்த தொழிலாளிக்கு 17 மாத சிறை

போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில் தனது மனைவின் கழுத்தை நெரித்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்திய ஆடவர் ஒருவருக்கு மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 17 மாத சிறைத் தண்டனை விதித்தது.

44 வயது சின் சோங் தோய் என்ற அந்த நபர் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மூவார், ஜாலான் பக்ரி, Taman Arosa-வில் உள்ள தனது வீட்டில் 42 வயதுடைய தனது மனைவியின் கழுத்தை நெரித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் Fatin Dalilah Khalid இத்தண்டனையை விதித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்