வாகனம் மதுகுவில் விழுந்ததில் இருவர் மரணம்

வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, ஆற்று மதுகுவில் விழுந்ததில் இருவர் நீரில் மூழ்கி மாண்டனர். இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளயவில் பேரா, பரிட், கம்போங் புலாவ் பிசாங், ஜாலான் போடா கிரி- தஞ்சோங் பெலாஞ்சா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 39 வயது மியோர் ஹைருல் அட்சாஹா அப்துல் ஹமிட் மற்றும் 25 வயதுஅஹ்மத் ஹசிம் பஹாருதீன் என்ற இரு நண்பர்கள் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

செம்பனைத் தோட்டம் ஒன்றுக்கு டொயோட்டா ஹிலக்ஸ் ரக வாகனத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்