டத்தோ அந்தஸ்தை கொண்ட ஓர் இந்திய வர்த்தகரால் வழிநடத்தப்பட்டு வந்த
முதலீட்டுத்திட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு கோடி வெள்ளி இழப்பீடு தொடர்பில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பத்து முதலீட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்த டத்தோவுடன் தொடர்புப்படுத்தப்பட்ட மூன்று நிறுவனங்களில் முதலீடு செய்த பத்து பேர், வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் போல உரிய லாபத்தை பெறவில்லை என்றும் முதலீட்டுப் பணமும் பறிபோனதாகவும் அந்த பத்து முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டினெஷ் முதால் தெரிவித்துள்ளார்.
தனது கட்சிக்காரர் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் வெள்ளி முதல் பத்து லட்சம் வெள்ளி வரையில் அந்த டத்தோவின் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து இருப்பதாக டினெஷ் முதால் குறிப்பிட்டார். இது தொடர்பாக 15 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.