விளம்பர பதாகை பெண் மீது சாய்ந்து தோல் பட்டை எலும்பு முறிவு

ஜெராந்துட், மார்ச் 3 –

சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை ஒன்று, அவ்வழியில் சென்றுக் கொண்டிருந்த பெண் மோட்டார் வண்டியின் மீது சாய்ந்து விழுந்ததில், அப்பெண்ணின் தோல் பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

பகாங் ஜெராண்டுட் மாரான் செல்லும் வழியில் , தோக் காஜா சமிஞ்சை விளக்கு அருகில் வைக்கப்பட்ட அந்த விளம்பர பதாகை, நேற்று மாலை 3..30 மணி அளவில் அவ்வழியில் சென்ற 57 வயது ஜி. முனியம்மா மீது விழுந்து விளைவு ஏற்படுத்து உள்ளது. இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஜெரண்டுட் வட்டார போலீஎ, தலைவர் சுப்ரின்டென்டன் அஸ்மான் மாட் காமிஸ் , பாதிக்கப்பட்ட மூதாட்டி அவ்வழியில் செல்லும் போது, பலத்த காற்று வீசியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக கூறினார்.

அலாம் ஃபுலோரா தொழிலாளியான அந்த மூதாட்டிக்கு நெற்றி, கண் மற்றும் கைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தற்பொழுது சிகிச்சைப் பெற்று அவரது உடல் நலம் சீராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்