100 விழுக்காடு சீர்திருத்தங்ஙகளை கோரியவர்களுக்கு எதிராக விசாரணை

கோலாலம்பூர், பிப்ரவரி 28 –

நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் கோலாலம்பூர், நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே பெர்சே இயக்கம் நடத்திய பேரணியில் 100 விழுக்காடு சீர்திருத்தங்களை கோரி, நாடாளுமன்ற கட்டட வெளிவளாகம் வரை நடைபெற்ற ஊர்வலம் தொடர்பில் அதன் ஏற்பட்டாளர்கள் போலீசாரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

இந்த பேரணி தொடர்பாக போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணை முடிவடைந்துவிட்டதைத் தொடர்ந்து அதன் ஏற்பாட்டாளர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது என்று டத்தோ அலாவுதீன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் 2012 ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் கீழ் விசாரணை கோப்பு ஒன்று திறக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்