புக்கிட் ஜாலிலில் நேற்று தொடங்கியுள்ள மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் சாலை போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே) முகப்பில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
இன்று காலை 7.30 மணியளவில் ஜேபிஜே முகப்பில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் புதிய தலைக்கவசத்தை பெற வரிசையில் நிற்க தொடங்கினர்.
பொதுமக்களின் கோரிக்கையின் காரணமாக நேற்று ஒப்பீடுகையில் ஜேபிஜே முகப்பு இன்று காலை 8.30 மணியளவிலேயே திறக்கப்பட்டுவிட்டன. குறுகிய நேரத்திற்குள் தலைக்கவசம் வெற்றிகரமாக மக்களுக்கு ஜேபிஜே பரிமாற்றம் செய்து கொடுத்தனர்.