நேர்மறையான எதிர்பார்ப்பை ஏற்படுத்துயுள்ளது

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வான் இப்ராஹிம் மின், சீனப் பயணம், நேர்மறையான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ம.இ.கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிரதமரின் இந்த வருகை மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவையும், பங்களிப்பையும் காட்டுகிறது என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வாரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், அவர் வருகை மேற்கொண்ட கிழக்காசியாவின் முதல் நாடாக சீனா விளங்குகிறது என்று சரவணன் குறிப்பிட்டார்.

சீன அதிபர்ஜி ஜின்பிங்கும், பிரதமர் அன்வாரும் நேரடியாக சந்தித்திருப்பது, மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்வதாக உள்ளதென தாப்பா எம்.பி. யுமான சரவணன் வர்ணித்தார்.

WATCH OUR LATEST NEWS