SRC International வழக்கில், அனைத்து சட்டக்கதவுகளும் மூடப்பட்ட நிலையில், சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், மனமுடைந்து விடாமல், தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று ஜொகூர் அம்னோ கேட்டுக்கொண்டுள்ளது.
தண்டனையை எதிர்த்து செய்துக்கொள்ளப்பட்ட சீராய்வு மனுவில், நஜீப் தோல்விக் கண்டதற்காக மாநில அம்னோ அனுதாபம் கொள்கிறது என்றாலும், மிகுந்த நெறுக்கடியில் உள்ள நஜீப்பிற்குத் தொடர்ந்து மனவலிமையை இறைவன் அருள வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜொகூர் அம்னோ தலைவர் முகமட் காலிட் நூர் டின் தெரிவித்தார்.