சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரியும் மருத்துவ ஊழியர்களுக்கும் அவசரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், கூடுதல் எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்பராஹிம் இன்று மக்களவையில் கூறினார்.
இதுநாள்வரை சுகாதார சிகிச்சையகத்தில் வேலை நேரத்திற்கு அப்பால் பணிப்புரியும் பணியாளர்களுக்கு எந்தவொரு எலாவுன்ஸ்சும் வழங்கப்படவில்லை என்பதால் அரசாங்கம் அதனை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணி நேரத்திற்கு அப்பால் பணிப்புரிபவர்கள், தங்களின் விடுமுறையில் பணிப்புரிபவர்கள், பொது விடுமுறைகளின் போது பணிபுரிபவர்கள் என்ற அடிப்படையில் சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்கு இந்த எலாவுன்ஸ் வழங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.
இந்த அமலாக்கத்தினால், பொது மருத்துவமனைகளில் குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தைக் குறைப்பதற்கான வழியாகவும் அமையும் என்று தாம் நம்புவதாக மேலும் குறிப்பிட்டார்.