கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி, 31 நாட்களுக்கு நடைபெற்ற 15 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத் தொடர், இன்று செவ்வாய்க்கிழமையுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்று நோய் பரவலுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில், மிக நீண்ட நாட்கள் நடைபெற்ற மக்களவைக் கூட்டமாக இது கருதப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகும்.