மலேசியாவில், ஆண்களின் மலட்டு தன்மை தொடர்பான பிரச்னைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மேலவையில் தெரிவிக்கப்பட்டது.
ஆண்கள் தொடர்பாக தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், 60 விழுக்காடு முடிவின் படி அதிகமான ஆண்கள் மலட்டுத் தன்மைp பிரச்னையை எதிர்நோக்கியிருப்பதாக மகளீர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஐமான் அதிரா சாபு தெரிவித்தார்.
இதன் காரணமாக, திருமணமான பல தம்பதியர், குழந்தை பாக்கியமின்றி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆண்களின், மலட்டுத் தன்மை பிரச்னை தீர்க்கப்பட்டு, அவர்களின் இல்லற வாழ்வு சிறக்க ஆண்களுக்கான நல்வாழ்வு கிளினிக்குகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக ஐமான் அதிரா விளக்கினார்.