தமது இரு சிறுநீரங்களையும் விற்கப்போவதாகவும், ஆர்வமுள்ளவர்கள் அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டிக் டாக் பயனர் ஒருவர், தமது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
தமது இரு சிறுநீரகங்களையும் விற்கப் போகும் திட்டம் ஏதுவும் தமக்கு இல்லை என்று டேடி கெசி என்ற பெயரில் அந்த அறிவிப்பைச் செய்த ஆடவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தாம் எதிர்நோக்கியுள்ள கடன் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அவசரப்பட்டு எடுத்த முடிவின் விளைவாக அதனை டிக் டாக் கில் பதிவேற்றம் செய்து விட்டதாகவும், சிறு நீரகங்களை விற்ற பின்னர் வாழ்க்கையில் அடுத்த நடக்கக்கூடிய துயரங்களை தாம் தெளிவாக புரிந்து கொண்டதால் தமது கூற்றில் உண்மையில்லை என்று அந்த இளைஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.