முன்னாள் பிரதமரும், பெர்சத்து கட்சியின் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை அகற்றப்பட்டுள்ளதாக இன்று கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல்,முகைதீனுக்கு எதிரான இந்தத் தடையை அகற்றும்படி குடிநுழைவுத் துறையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான் எஸ்.பி.ஆர்.எம் கேட்டுக்கொண்டிருப்பதாக அரசு தரப்பு முதிர் நிலை வழக்கறிஞர் ஷம்சூல் போல்ஹசான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.