ஆதாரங்களை நிரூபிக்க தயார்

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, 22 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த போது தம்மையும் தமது குடும்பத்தினரையும் வளப்படுத்திக்கொள்வதற்கு ஏகப்பட்ட சொத்துக்கள் குவிக்கப்பட்டது தொடர்பில், தேவையான ஆதாரங்களை நிரூபிப்பதில் தமக்கு பிரச்னை இருக்காது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.

தாம் சொத்துக் குவித்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி துன் மகாதீர் தமக்கு எதிராக வழக்குத் தொடுத்திருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
துன் மகாதீர் தொடுத்துள்ள இவ்வழக்கில், தேவையான ஆதாரங்களை நிரூபிப்பதிலும் தமக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது என்று அன்வார் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS