ECRL ரயில் சேவை 2027 இல் தொடங்கும்

இ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்கு கரையோர மாநிலங்களுக்கான ரயில் சேவை, வரும் 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் ஆண்டணி லோக் தெரிவித்துள்ளார்.
கிளந்தான், தும்பாட்டைடையும், சிலாங்கூர், கோலக் கிள்ளானையும் ஒரே ரயில் இருப்புப் பாதையில் இணைக்கும் 665 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இ.சி.ஆர்.எல் ரயில் திட்டம், சரக்குகளைக் கையாளுவதற்குப் பெரும் துணை நிற்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக சாலைப் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை, இ.சி.ஆர்.எல் ரயில் திட்டம் வெகுவாக குறைக்கக் கூடும் என்று ஆண்டணி லோக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS