தமது 10 மாத ஆண் குழந்தையை சித்ரவதை செய்ததாக் நம்பப்படும் 26 வயது குடும்ப மாதுவைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்டாலிங் ஊதாமாவில் உள்ள அவரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில், அந்த மாது கைதுசெய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
உடலில் பலத்த காயங்களுக்கு ஆளான அக்குழந்தை தற்போது ஷா ஆலாம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக ஃபக்ருடின்குறிப்பிட்டார்.