உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம்

ஜானாவிபாவா திட்டத்தில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோதப் பண மாற்றம் நிகழ்ந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின், தமக்கு எதிரான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

இது தொடர்பான ஒரு விண்ணப்பம், கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முகைதின் யாசினின் வழக்கறிஞர் ரொஸ்லி டாஹ்லான் தெரிவித்தார்.
சில சட்ட அம்சங்களை மேற்கோள் காட்டி, இந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS